போக்குவரத்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் போக்குவரத்து போலீசார் சார்பில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. சமூகத்திலும், போக்குவரத்து முன்னேற்றத்திலும் மாணவிகள் எந்தெந்த வகையில் பங்களிக்க  வேண்டுமென தல்லாகுளம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பூர்ணகிருஷ்ணன் எடுத்துரைத்தார். கல்லுாரி போக்குவரத்து கிளப் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஏற்பாடுகளை செய்திருந்தார். 300க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement