4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
முஸாபர்நகர்: உத்தர பிரதேசத்தில், கடந்த நான்கு மாதங்களில், 10 கொலை வழக்குகளை விசாரித்து, 22 பேருக்கு துாக்கு தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிபதி ரவிகுமார் திவாகர் விசாரிக்க இருந்த, 100 கொலை வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பதவி வகித்து வருபவர் ரவிகுமார் திவாகர், 46. இவர், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் வீடியோ மூலம் ஆய்வு நடத்த உத்தரவிட்டு, கடந்த 2022ல் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
கடந்த 2009ல் அஸம்கரில் கூடுதல் சிவில் நீதிபதியாக பணியை தொடங்கிய ரவிகுமார் திவாகர், 2015ல் சுல்தான்பூர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2025ல் முஸாபர்நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பணி அமர்த்தப்பட்டார்.
இந்த நீதிமன்றத்தில், கடந்த நான்கு மாதங்களில் 10 கொலை வழக்குகளை விசாரித்த ரவிகுமார், 22 பேருக்கு அதிரடியாக துாக்கு தண்டனை விதித்தார். இதனால், சட்ட நிபுணர்களும், தண்டனை பெற்றவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பல்வேறு கொலை வழக்குகளில் அவர் அளித்த அதிகபட்ச தண்டனை, நாடு முழுதும் பேசு பொருளானது. இந்நிலையில், அவர் விசாரிக்கவிருந்த 100 கொலை வழக்குகள், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி வீரேந்திர குமார் சிங் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரமோத் தியாகி கூறுகையில், ''விரைவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 100 கொலை வழக்குகளும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெறக் கூடியவை.
''நீதிபதி ரவிகுமார் திவாகர் தொடர்ச்சியாக மரண தண்டனை வழங்கி வருவதால், வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் இடையே அச்ச உணர்வு எழுந்துள்ளது,'' என்றார்.
இந்த நாட்டில் சட்டம் மற்றும் அரசமைப்பு ஆகியவற்றின் படி நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்காமல் வழக்கறிஞர்கள் கேட்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதுதான் மரபாக உள்ளது. இவர்களால் குற்றவாளிகள் பெருகுகின்றனர் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் உள்ளனர் நம்மை காப்பாற்ற என்று.
பட்டினி போட வேண்டாம் அதற்கு பதில் மருத்துவ ஆராய்ச்சிக்கு எலிக்கு பூனைக்கு பிறகு மருந்துகளை இவர்களுக்கு செலுத்தி சோதனை செய்யலாம். தினமும் சிறிது சிறிதாக இன்சுலின் போன்ற மருந்துகளை செலுத்தி சிறிது சிறிதாக கொல்லலாம். அனுபவித்து இறக்கவேண்டும்
எல்லா கொலையாளிகளையும் மாலைபோட்டு பிரியானி போட்டு வீட்டுக்கு அனுப்பவும்
வழக்கறிஞர்களுக்கு இடையே ஏன் அச்சம். ? எந்த நீதிமன்றமும் குற்றவாளிக்கு சாதகமாக வாதிட்டாலும் வழக்கறிஞரை தண்டிப்பது இல்லை. ஏராளமான அப்பீல், கருணை மனு மீது தண்டனை குறைக்க வழி இருக்கும் போது, மனுதாரர்கள் இடையே ஏன் அச்ச உணர்வு? வழக்கறிஞர்கள் நீதியை நிலை நாட்ட விரும்பவில்லை. நிதியை நிலைநாட்ட விரும்புகிறார்கள். நீதிபதி பணியிட மாற்றம் குற்றம் அதிகரிக்க நீதிமன்றம் விரும்புகிறது.
ஜெயில் குற்றவாளிகளுக்கு உணவு, தண்ணீர் கட்டாயம் கொடுக்க கூடாது..... ஒரே ஒரு முறை ஜெயிலுக்கு சென்று வந்து விட்டால் பயம் என்பது துளி கூட இருக்காது மீண்டும் மீண்டும் தவறு செய்வார்கள்..... மரண தண்டனை வேண்டாம் பட்டினி போடுவது தான் இதற்கு தீர்வு....
எதற்காக கொடுத்தார் என்ற கேள்வி, விசாரணைக்கு எல்லாம் சட்டத்தில் இடமில்லை. அதிக பட்சம் ஒரு பணி மாறுதல் அவ்வளவுதான்.
"அவர் விசாரிக்கவிருந்த 100 கொலை வழக்குகள், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி வீரேந்திர குமார் சிங் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது " - இது என்ன மாதிரி முடிவு? மூடத்தனமாக தோன்றவில்லையா ?
இந்தியாவில் குற்றங்கள் அதிகரிக்க காரணமே தகுந்த தண்டனைகள் கொடுக்காததே காரணம். இந்த நீதிபதி நாம் அனைவரும் பாராட்டவேண்டும். இந்த மாதிரி நீதிபதியை அவரை வேலையை செய்யவிடாமல் இப்படி செய்து தடுத்தால் தர்மம் எப்படி தழைக்கும் ? தெரிந்தே குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதில் எல்லாம் பாவம், புண்ணியம் எல்லாம் பார்ப்பதற்கு பதிலாக நீதிமன்றங்கள் செயல்படாமலே இருக்கலாம்.
22 death penalties in 10 cases. Strike rate 2.20. Is that a record?
கொலை செய்யும் போது அச்சம் இல்லையா? என்ன ஒரு சிந்தனை. அந்த நீதிபதி பாராட்டுக்குரியவர்.மேலும்
-
நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில்51 பேர் பலி
-
வயசு வெறும் நம்பர் தான்; உலக மூத்த குடிமக்கள் தினத்தில் மனம் திறந்த மூத்த குடிமக்கள்!
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர்களை சாலையில் தரையிறக்கி ஒத்திகை
-
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி; இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச போக்குவரத்து கடும் பாதிப்பு
-
தமிழகத்துக்காகவே மேகதாது அணை; ஆசை காட்டுகிறார் கர்நாடக முதல்வர்
-
11 மதுபான தடை நீக்க விவகாரம்; நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்