முதல்வன் விருது வழங்கல்

தேவகோட்டை: தேவகோட்டையில் ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு முதல்வன் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாரிமுத்து தலைமை வகித்தார். சங்க செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தில் குமரன் ஆகியோர் தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றிய அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், முதல்வன் விருதுகள் வழங்கினர். காரைக்குடி மகரிஷி பள்ளி தலைவர் சேதுராமன், சங்க நிறுவனர் எட்வின் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர்செல்வம் நன்றி கூறினார் தலைமை ஆசிரியர் புகழேந்தி தொகுத்து வழங்கினார்.

Advertisement