கலை இலக்கிய விழாவில் 80 மாணவர் பங்கேற்பு

ஓமலுார்: கஞ்சநாயக்கன்பட்டி குறுவள மையத்துக்குட்பட்ட துவக்க, நடு-நிலை பள்ளிகளுக்கான கலை இலக்கிய விழா, கஞ்சநாயக்கன்-பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று நடந்தது.

தலைமை ஆசிரியர் சரவணக்குமார் தலைமை வகித்தார். காடை-யம்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜமுனா தொடங்கி வைத்தார். 11 பள்ளிகளை சேர்ந்த, 80 மாணவ, மாண-வியர், நடனம், கதை கூறல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்பட, 18 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒருங்கி-ணைப்பாளர் ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement