இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர்களை சாலையில் தரையிறக்கி ஒத்திகை
ஜெய்சல்மார்: ராஜஸ்தானில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நமது ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர்களை சாலையில் தரையிறக்கி வெற்றிகரமாக ஒத்திகை செய்தனர்.
ஜெய்சால்மர் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள ஒரு முக்கிய சாலையில் இந்த ராணுவ ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அப்பாச்சி, எல்.சி.ஹெச்., மற்றும் சீட்டா போன்ற ரகங்களைச் சேர்ந்த நான்கு முதல் ஐந்து ஹெலிகாப்டர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டன.
வழக்கமான தரையிறங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத நிலையில், மாற்றுத் தளங்களைப் பயன்படுத்தி ராணுவ ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான திறனை மேம்படுத்துவதற்காக, இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஒத்திகையின் நோக்கம் குறித்து இந்திய ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்தக் குறிப்பும் வெளியிடப்படவில்லை.
வாசகர் கருத்து (4)
Anand - chennai,இந்தியா
21 ஆக்,2026 - 10:46 Report Abuse
வாழ்த்துக்கள். 0
0
Reply
Tamilarasu Kandasamy - Mettupalayam,இந்தியா
21 ஆக்,2026 - 08:57 Report Abuse
போர் வரவேண்டும் போர் அடிப்பது போல் பாகிஸ்தானை அடித்து துவைக்க வேண்டும் .அப்போதுதான் தேசபக்தர்கள் மனம் ஆறுதல் அடையும் . 0
0
Chandhra Mouleeswaran MK - Tiruppur,இந்தியா
21 ஆக்,2026 - 09:13Report Abuse
அண்ணே அண்ணே அப்பிடிப் போர் வந்துட்டுதுன்னு ஒரு பேச்சுக்கு வய்ங்க அப்ப, ப்ளீஸ் ப்ளீஸ், இந்த நொண்டிக் கூட்டணி ஒண்டிப்பிலித் தலீவருங்களையும், உருமைப் போராளிகளையும் புடுச்சு பெண்டு செண்டு எல்லாத்தையும் நிமித்தி உடச் சொல்லுங்க அண்ணே 0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
21 ஆக்,2026 - 08:34 Report Abuse
வெல்க பாரதம் வாழ்க பாரதம் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement