மினி பஸ் மோதி இளைஞர் பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோட்டூர் மலையாண்டிபட்டணத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்,39. இவர், கடந்த, ஐந்து ஆண்டுகளாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாக்கினாம்பட்டியில் வசித்து வந்தார்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சுரேஷ்குமார், நேற்று இருசக்கர வாகனத்தில்  மாக்கினாம்பட்டி கருப்பராயன் கோவில் ரோட்டில் சென்றார். அப்போது, எதிரே வந்த மினி பஸ், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுரேஷ்குமார் இறந்தார். கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement