ஒரு மாதத்தில் ரூ.12,000 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!
சென்னை: தமிழக அரசு, கடன் பத்திரங்கள் வெளியீடு போன்றவற்றின் வாயிலாக, கடந்த ஜூலையில் மட்டும், 12,044 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி உள்ளது.
தமிழக அரசுக்கு, வரி வாயிலாகவும், வரி அல்லாத பிற வகையிலும் வருவாய் கிடைக்கிறது. அதன்படி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், நிலம் விற்பனை, விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி, மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசின் வரி பகிர்வு, இதர வரிகள் மற்றும் தீர்வை வாயிலாக, வரி வருவாயும், மத்திய அரசின் மானியம் போன்ற வகையில், வரி அல்லாத வருவாயும் கிடைக்கின்றன.
நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஜூலை வரை, அரசின் மொத்த வருவாய், 89,718 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், வரி விதிப்புகள் வாயிலாக கிடைத்த வருவாய், 82,566 கோடி; வரி அல்லாத வருவாய், 4,070 கோடி; மத்திய மானியம், 3,082 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஏப்., முதல் ஜூலை வரை, மொத்த செலவு, 1.23 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் பற்றாக்குறை, 25,267 கோடி ரூபாய்.
மொத்த செலவில், அதிக அளவாக, ஏற்கனவே வாங்கப்பட்ட கடன்களுக்கு, செலுத்தப்பட்ட வட்டி செலவு, 21,176 கோடி ரூபாயாகவும், ஓய்வூதியத்திற்கான செலவு, 17,237 கோடி ரூபாயாகவும் உள்ளன.
வரவை விட, செலவு அதிகம் இருப்பதால், அரசு, பல்வேறு திட்டங்களுக்கு செலவை மேற்கொள்ள, கடன் வாங்குகிறது. அதன்படி, கடன் பத்திரங்களை வெளியிட்டும், பல்வேறு வங்கிகளிடம் இருந்தும், கடன் வாங்கப்படுகின்றன.
இந்த நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில் வாங்கப்பட்ட கடன், 32,925 கோடி ரூபாயாக உள்ளது. இது, ஜூன் நிலவரப்படி, 20,881 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 12,044 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.
கடந்த, 2025 - 26ம் நிதியாண்டில் ஏப்., முதல் ஜூலை வரை அரசின் மொத்த வருவாய், 85,876 கோடி ரூபாயாகவும், மொத்த செலவு, 1.09 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தன. இந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன், 30,956 கோடி ரூபாயாக இருந்தது.
அப்புறம் மாமன் சீர் மச்சான் சீர் என்று அள்ளி உட்டா இப்படித்தான்...ஒரு எடப்பாடி என்ற தமிழன் அரசாண்ட வரைக்கும் ஐந்து லட்சம் கோடி கடன் ஆக இருந்தது அதுவும் சுகந்திரம் அடைந்ததில் இருந்து. ஆனா தமிழன் விடியல் வேண்டும் என்றும் மாற்றம் வேண்டும் என்றும் ஒரு திருட்டு திராவிட கூட்டத்தையும் திராவிட தற்குறி கூட்டத்தைக் கொண்டாந்ததின் விளைவு இப்போ தமிழகத்தின் கடன் பன்னிரெண்டு லட்சம் கோடியாக ஆறே வருடத்தில் உயர்ந்து விட்டது... என்னைக்கு தான் தமிழன் சினிமா மோகத்தயும் திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடர்களின் பசப்பு வார்த்தைக்கு மயங்காமல் அண்ணாமலை எடபாடியார் போன்றோரை சட்டசபைக்கு அனுப்புறானோ அன்றைக்கு தான் தமிழகம் உருப்படும்...
ooruku than advice.
மத்திய அரசு எப்படி அனுமதித்தது ??
கடன் வஞ்சுக்கோங்க செலவு செய்யுங்க என்ஜோய் பண்ணுங்கோ ப்ரோ சாதனை பண்ணுறாருன்னு ஊருடோங்கோ எப்போ ப்ரோ அமெரிக்கா ஜனாதிபதி அவ்வருன்னு ஊருடுங்க
வன்னியரசு மாதிரி பாவப்பட்ட ஜென்மங்களுக்காக இந்த அரசு மீண்டும் மீண்டும் கடன் வாங்கி தமிழக மக்களின் வரிச்சுமையைத்தான் அதிகரிக்குது , இந்த மதவெறியர்களுக்காக பாடுபட்ட ஜென் Z இன்னமும் எந்த சுமையையும் அனுபவிக்கவில்லை போல