துக்காராம் முண்டேவைத் தொடர்ந்து ரோஷன் ஜேக்கப்; உ.பியில் உணவுக் கலப்படத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை
நமது நிருபர்
மஹாராஷ்டிராவில் துக்காராம் முண்டே போல, உத்தரபிரதேசத்திலும் உணவுக் கலப்படத்திற்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ரோஷன் ஜேக்கப் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மஹாராஷ்டிரா மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையராக உள்ள துக்காராம் முண்டே உணவுப் பொருளில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி ரோஷன் ஜேக்கப் உபியில் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உளள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையராக உள்ள டாக்டர் ரோஷன் ஜேக்கப், மாநிலத்தில் கலப்படத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக, கலப்பட பால் மற்றும் போலி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் கடும் சோதனைகளை நடத்தி வருகிறார்.
இதில் ரூ. 11.66 கோடி மதிப்பிலான கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி 63.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான கெட்டுப்போன உணவு பொருட்களை பறிமுதல் செய்து, ரோஷன் ஜேக்கப் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அழித்தனர்.
சமீபத்தில் மதுராவில் 1,500 கிலோ போலி பன்னீரையும், இன்று சம்பாலில் 4,500 கிலோ ரசகுல்லாக்களையும் இவரது குழுவினர் பறிமுதல் செய்தனர். உணவுக் கலப்படத்திற்கு எதிராக, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆய்வுகள், ரெய்டுகள் மற்றும் உணவு பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.
உத்தரப் பிரதேசத்தில் உணவுக் கலப்படம் செய்பவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் பொது இடங்களில் குறிப்பிடவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இதே போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
துக்காராம் முண்டேவை தொடர்ந்து, ரோஷன் ஜேக்கப் உணவகங்களில் நடத்தி வரும் சோதனை தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது அதிரடி நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
யார் இந்த ரோஷன் ஜேக்கப்?
* 1978 செப்டம்பர் 25ம் தேதி பிறந்த ரோஷன் ஜேக்கப், உத்தரப் பிரதேசத்தின் 2004ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
* இவர் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்; ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
* தற்போது இவர் உத்தரப் பிரதேச அரசின் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
* இந்தப் பதவியில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி முதல் உள்ளார். இதற்கு முன்னர் பல்வேறு முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார்.
கேள்வி: தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு கமிஷனர் என்னும் ஒரு அதிகாரி உள்ளாரா?
பதில்: அவர் எங்காவது பிரேயர் மீட்டிங்கில ஜபம் செய்து கொண்டிருப்பார் .
மஹாராஷ்டிரா மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பதவி ஏற்றத்தால் பல அரசு அதிகாரிகள் விருப்ப ஒய்வு கேட்டார்களாம் . அரசு அதிகாரி என்றால் இது மாதிரி இருக்கணும். இந்தியாவில் இப்போ மக்கள் மத்தியில் ஊழல். குற்றம் செய்தால் ஏற்று கொள்கிறார்கள். சமூகம் இப்படி போனால் என்ன ஆகும்.?. மாற்றாக மக்கள்கொதித்து எழுந்து ஊழல். குறம் செய்த அதிகாரியை ஜெயிலில் போடுங்கள் என்று சொல்லலும். அதிகாரிகளும் திறமையுடன் நேர்மையாக சட்டத்துக்கு உட்பட்டு செயல் பாடனும். தமிழகத்தில் செந்தில் பாலாஜியை பாருங்கள். எல்லோரும் இவரை குற்றவாளியாக பார்க்கிறார்கள். அவர் இதை பற்றி ஏதாவது கவலை படுகிறாரா.. > இவர் தான் இப்போ இருக்கிற சமூகத்துக்கு ஓர் உதாரணம். இப்படி போனால் இந்திய இருக்குமா ..?.
மஹாராஷ்ட்ரா மற்றும் உ.பி. மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். உண்மையில் இதற்க்கு முன்பிருந்தவர்கள் இத்தனைநாட்கள் தங்களது பணியை ஒழுங்காக செய்யவில்லை. ஒவ்வொரு முறைகேடும் அவர்கள் அறிந்ததே. அவற்றை தடுப்பதற்குப்பதில் அதனால் பலன் அடைந்தார்கள். சாலையோர திறந்தவெளி உணவகங்கள், தரமற்ற கலப்பட உணவுப்பொருட்கள், கொடிய நோய்களை உண்டாகக்கூடிய கெமிக்கல் கலந்த செயற்கை நிறமூட்டிகள், கெட்டுப்போன மாமிச உணவுகள், சுகாதார பரிசோதனை மேற்கொள்ளாத சமையல்கலைங்கர்கள் உணவு தயாரிப்பது, காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் என அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியும். இவர்கள் ஆய்விற்கு சொல்வதெல்லாம் பணம் சம்பாதிக்கமட்டுமே. மக்கள் உடல்நலத்தைப்பற்றி இவர்களுக்கு கவலையில்லை.
வரவேற்கிறோம். மிக்க நன்றி ரோஷன் ஜேக்கப் அவர்களே. உங்கள் நடவடிக்கை பலருக்கு முன் மாதிரியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
சபாஷ். ஆரோக்கியத்திற்கான ஆரோக்கியமான போட்டி.
இந்த அதிகாரிகள் எல்லாம் இத்தனை வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? திடீரென்று இப்பொழுது தான் இவர்களின் நேர்மை விழித்துக் கொண்டதோ? விரைவில் கரப்பான்கள் வெளியில் வரும்.
மனதை சுத்தமாக வைத்துக் கொண்டால் பல நோய்களை விரட்டி விடலாம்..... ரோட்டில் சுற்றி திரியும் மனிதர்கள் கீழே கிடைக்கும் எச்சில் உணவு, கெட்டுப்போன இறைச்சிகளை சாப்பிட்டு, சாக்கடை தண்ணீர் அருந்தி, கொரோனா தடுப்பு ஊசி போடாமல் பல ஆண்டுகள் வாழும் நபரை பார்க்கிறோம் அது எப்படி? சுத்தம் சுகாதாரம் பார்த்து வாங்கி சாப்பிட பலர் வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் சென்று வருவதை பார்க்கலாம். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நோய் நம்மை அணுகாது...
இரவு பத்து மணிக்குமேல் பிரியாணி போன்ற உணவுகளை விற்க தடை செய்ய வேண்டும்.
அங்கே எல்லாம் ஆம்பளைகள் ஆட்சி செய்கிறார்கள் தமிழகத்தில் என்றும் அப்படி இருந்ததில்லை திராவிட மாடலுக்கு பிறகு தமிழகத்தில் நடத்தினால் காத்திருப்போர் பட்டியலில் வைத்து விடுவார்கள்
தமிழகத்தில் கலப்படம் இல்ல உணவை யார் முடிவு செய்வார்?. இங்குள்ள அதிகாரிகளுக்கு நல்ல ரத்தம் போடவில்லையா?