அமெரிக்காவில் இந்திய வம்சாவளி கடை உரிமையாளர் சுட்டுக்கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில், தனது கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது, 62 வயதான இந்திய வம்சாவளி கடை உரிமையாளர் சுரேஷ் படேல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் படேல், 62. இவர் அமெரிக்காவின் டென்னசி மாகாணம், ஜாக்சன் நகரில் மதுபான கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையன் ஒருவன் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.
பிறகு முகமூடி அணிந்து இருந்த அந்த கொள்ளையன் சுரேஷ் படேலை சுட்டுக் கொன்றுவிட்டுப் பணத்துடன் தப்பியோடினான். அருகில் நின்றிருந்த அவரது மகள் உயிர் தப்பினாலும், கண்முன்னே நிகழ்ந்த இந்த கோரச் செயலால் மிகுந்த மனஅதிர்ச்சிக்குள்ளானார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர். சம்பவம் பற்றிய தகவல்களை அளிக்கும்படியும் பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
இப்ப இருக்கும் அமெரிக்கா, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடே இல்லை. இதை முதலில் மக்கள் உணரவேண்டும். குறிப்பாக இந்திய தேசத்து மக்கள்.
குடி, குடியை கெடுக்கும்மேலும்
-
திருவாடானை கோயிலில் முகூர்த்த நாள் கூட்டம்
-
செய்தி சாரல்
-
‘காந்திபுரம் மேம்பாலத்தில் இறங்குதளம் என்னவானது?’
-
2029ல் லோக்சபா தேர்தலுடன் 22 மாநில சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த பரிசீலனை!
-
எதிர்க்கட்சியினருக்கு ஊழல், கட்சி நிதி என்று கூறினாலே கோபம் வருது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
-
கார் பந்தயத்தில் விபத்து; அஜித் காயமின்றி தப்பினார்