ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் ; மிரட்டுகிறது ஈரான்

6

டெஹ்ரான்: தங்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைக்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நீடித்து கொண்டே வரும் நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிகளை அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் ஒரு மாகாணமாக அறிவித்து ஈரானை வெறுப்பேற்றி வருகிறார்.

இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்று ஈரான் கூறியிருந்தது.

இந்த நிலையில், ஹார்முஸில் விதிகளை மீறிச் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு ஈரான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி பயணிக்கும் சரக்கு கப்பல்களின் எதிர்கால பயணங்களுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது கப்பலை சிறைபிடிக்கவோ நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

இதனிடையே, தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு பிற நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை செயலர் ரெஷாய் தெரிவித்துள்ளார்.

Advertisement