ஊசி மலையில் சி.சி.டி.வி., கேமரா வனத்துறையினர் கண்காணிப்பு

1

கூடலுார்: 'கூடலுார் ஊசிமலை காட்சி முனையில், தடை செய்யப்பட்ட ஆபத்தான ப குதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அத்துமீறி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் எச் சரித்துள்ளனர்.

கூடலுாரில் இருந்து, 9 கி.மீ., தொலைவில், ஊசிமலை காட்சிமுனை அமைந்துள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூடலூர் மற்றும் முதுமலை இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனர். இங்குள்ள ஆபத்தான பகுதிகளுக்கு, செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்., 2ம் தேதி, ஊசி மலைக்கு சென்ற, 3 கேரளா சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பாறைகள் நிறைந்த பகுதிக்கு சென்று, தேன் கூட்டின் மீது கல் எறிந்தனர்.

தேனீக்கள் கொட்டியதில் கேரளாவை சேர்ந்த ஜாபர், 23, என்பவர் உயிரிழந்தார். இருவர் உயிர் தப்பினர்.

கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி, தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்ற செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சிவகுருநாதன், 28, என்பவர், 200 அடி பள்ளத்தில் விழுந்து, உயிருக்கு போராடினர்.

மாவட்ட நிர்வாகம், குன்னுார் வெலிங்டன் ராணுவ மீட்பு படைக் குழு உதவியுடன் பல மணி நேரம் போராடி, அவரை உயிருடன் மீட்டனர்.

இதை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பகுதிகளில், சுற்றுலா பயணிகள் செல்வதையும், அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதையும் கண்காணித்து தடுக்கும் வகையில், தற்போது வனத்துறையினர் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'ஊசிமலை காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தடுக்க, தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகிறோம்.

மேலும், 9 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதிக்கு செல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement