நாளை மிலாடி நபி மதுக்கடைகள் மூடல் 

கடலுார்: மிலாடி நபியை முன்னிட்டு நாளை மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை 26ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் அனைத்து வகை மதுக்கடைகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுக்கடைகள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் நாளை மூடே வண்டும்.

மீறி விற்பனை நடைபெற்றால், சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமதாரர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Advertisement