த.வெ.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் த.வெ.க., அரசின் நுாறு நாள் சாதனை விளக்க சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது.

உளுந்துார்பேட்டை மணிகூண்டு திடலில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் பரணிபாலாஜி தலைமை தாங்கி, த.வெ.க., ஆட்சியின் நுாறு நாள் சாதனை திட்டங்கள் குறித்து மக்களிடம் கூறினார்.

மாவட்ட இணைச் செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். செய்தி தொடர்பாளர் ஓட்டேரி ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். பொருளாளர் சுந்தரமூர்த்தி, திருநாவலுார் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுபாஷ்.

உளுந்துார்பேட்டை மேற்கு நகர செயலாளர் விஜய் செல்வா, ஒன்றிய செயலாளர் பரத், தெற்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, கிழக்கு செயலாளர் சேதுபதி, நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், அஜய், செந்தில்முருகன், சிவகுமார், பிரகாஷ், வேணுகோபால்.

உறுப்பினர் சேர்க்கை அணி ஒருங்கிணைப்பாளர் சிவாஜிகணேசன், மாநில மகளிரணி இணை அமைப்பாளர் பூவிழி, மாவட்ட துணை செயலாளர் ராஜலட்சுமி, மகளிரணி அமைப்பாளர் சுவிதா,  வழக்கறிஞரணி அணி இணை ஒருங்கிணைப்பாளர் வினோதினி.

செயற்குழு வசந்தன், மாணவரணி இணை அமைப்பாளர் அன்பரசு, தகவல் தொழில்நுட்ப அணி இணை அமைப்பாளர்கள் அஜித்குமார், மணிகண்டன், இளைஞரணி இணை அமைப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன், மாணவரணி இணை அமைப்பாளர் சத்யா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement