முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் முன்னாள் அமைச்சர் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மந்தாரக்குப்பம் கடைவீதியில்  நடந்த நிகழ்ச்சிக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் பெனாசீர்  முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி பொதுமக்கள், பேரூராட்சி துப்பரவு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை சேர்மன் பெலிக்ஸ், கட்சி நிர்வாகிகள் மதிமுருகன், அலாவுதீன், புஷ்பராஜ், ஜவகர், கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement