திருட்டு வழக்கில் தப்பி தலைமறைவானவர் கைது
தொண்டி: தொண்டி அருகே திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் கலந்தர். 2024ல் இவருடைய வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் நகைகளை திருடிச் சென்றனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் எஸ்.பி.பட்டினம் அருகே விளத்துமணக்கோட்டையை சேர்ந்த பழனியை 37, கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடந்தது. ஜாமினில் சென்ற பழனி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் சோழகன்பேட்டையில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது பழனியை கைது செய்தார்.
––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
-
உ.பி., கவர்னர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு; ஒருவர் கைது
-
உரிமம் பெறாத உணவுக்கடை: அபராதம் அதிகரித்து உத்தரவு; போதை பொருள் விற்றால் 'சீல்'
Advertisement
Advertisement