சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது

1

சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, நேற்று தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளின் உடமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, வடமாநில பெண்கள் பயணிகள் இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் சட்டவிரோதமாக 6 கிலோ அளவுக்கு ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் போலீஸில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட இருவருக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement