கல்லுாரியில் ஓணம் பண்டிகை விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.கல்லுாரி செயலாளர்  சகுந்தலா பார்த்தசாரதி தலைமை வகித்தார். முதல்வர் ரஜனி  துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு கல்லுாரி தாளாளர் வேலு மனோகரன் வாழ்த்து தெரிவித்தார். மலர்களால் வண்ணக் கோலமிட்டு கேரள உடையணிந்து நடனமாடி மாணவிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவிகள் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நடனங்களை ஆடினர்.  பல்வேறு விதமான உணவு வகைகளைக் காட்சிப்படுத்தினர்.  பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.––

Advertisement