மகள் மாயம் தந்தை புகார்

திருவெண்ணெய்நல்லுார்: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தர் மகள் வினோதினி, 18; இவர், 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து இவரது தந்தை பாலசுந்தர் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement