சிவகங்கையில் விவசாயிடம் ரூ.85 ஆயிரம் மோசடி
சிவகங்கை,ஆக.26-
சிவகங்கை விவசாயிடம் ஜெய்ப்பூர் மாட்டு வியாபாரி ரூ.85 ஆயிரம் மோசடி செய்த நிலையில் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியை சேர்ந்தவர் மணி 58.இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரை கடந்த பிப்.9ல் ஜெய்ப்பூரை சேர்ந்த அசோக்குமார் சிம்மா என்பவர் தொடர்பு கொண்டார்.
அவர் மாட்டுப்பண்ணை வைத்திருப்பதாகவும்,குறைந்த விலையில் பசு மாடுகளை விற்பனை செய்வதாகவும் மணியிடம் அறிமுகம் ஆகியுள்ளார்.அவர் கூறியதை நம்பிய மணி தொடர்ந்து அவரிடம் பேசியுள்ளார். இரண்டு பசு மாடுகள் வாங்குவதற்கு ஜிபேவில் ரூ.85 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அசோக்குமார் சிம்மா அவர் கூறியது போல் பசுமாடு கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணி நேற்று சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழை; சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்
-
கங்கனா ரனாவத் - க்ரீத்தி சனோன் சண்டையில் புகுந்த ராகுல்
-
விமான நிலையமும் வேணும்... விவசாயமும் வேணும்; சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்
-
மேட்டூர் அணை நாளை மறுநாள் திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்
-
மைக்ரோசாப்ட் சிஇஓ., சத்யா நாதெல்லாவின் ஆண்டு சம்பளம் ரூ.950 கோடி; ஒரு நாளைக்கு ரூ.2.60 கோடி!
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘ரூ.6,000 முதலீட்டில் துவங்கிய தொழில் இப்போது ரூ.30 லட்சத்தில் நடக்கிறது!’ –––––––––––––––
Advertisement
Advertisement