மைக்ரோசாப்ட் சிஇஓ., சத்யா நாதெல்லாவின் ஆண்டு சம்பளம் ரூ.950 கோடி; ஒரு நாளைக்கு ரூ.2.60 கோடி!

14


புதுடில்லி: கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் ஆண்டு ஊதியம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இவரது 2025ம் நிதியாண்டு சம்பளம் மட்டும் ரூ.950 கோடியாகும்.

உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் 2024ம் நிதியாண்டின் ஆண்டு வருமானம் ரூ.750 கோடியாக இருந்தது. இந்த நிலையில், இது 2025ம் நிதியாண்டில் ரூ.950 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகமாகும். இதில் 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான பங்குகள், 2.5 மில்லியன் டாலர் அடிப்படைச் சம்பளம் மற்றும் 9.5 மில்லியன் டாலர் ரொக்கப் போனஸ் ஆகியவை அடங்கும்.

மைக்ரோசாப்டின் வருவாய் 2025ம் நிதியாண்டில் சுமார் 15 சதவீதம் அதிகரித்தது. அதேபோல, இயக்க லாபம் 17 சதவீதம் உயர்ந்தது. கிளவுட் வருவாய் 23 சதவீதம் அதிகரித்து 169 பில்லியன் டாலருக்கும் குறைவாகவும், அஷ்யூர் வருவாய் 34 சதவீதம் அதிகரித்து 75 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது.

அதிக வருவாய், லாபம் ஆகியவையால் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் மைக்ரோசாப்டை ஒரு தெளிவான ஏஐ முன்னணி நிறுவனமாக நாதெல்லாவின் தலைமை நிலைநிறுத்தியுள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு...





சத்யா நாதெல்லாவின் ஓராண்டு சம்பளம் ரூ.950 கோடி என்றால், மாதத்துக்கு ரூ.79 கோடி ஆகிறது. அதாவது, ஒவ்வொரு நாளைக்கும் அவரது சம்பளம் ரூ.2.60 கோடி. ஒரு மணி நேரத்துக்கு அவரது சம்பளம் ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்

Advertisement