விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில், டி.ஆர்.எம்., ஆய்வு செய்தார்.

விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு, திருச்சி டி.ஆர்.எம்., பாலகிராம்நெகி தனி ரயிலில் நேற்று மாலை வந்தார். அங்கு ரயில் நிலைய நடைமேடைகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.25.50 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.

இதில், எக்ஸலேட்டர், நடை மேம்பாலம் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement