தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை ; கவர்னர் ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக திருத்தம் செய்யப்பட்ட புதிய சட்ட மசோதாவுக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக அரசுப் பணிகளில், நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும், அனைத்து காலியிடங்களிலும், 20 சதவீதம் இடங்களை, தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர், அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல், இதுநாள்வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.
இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள், தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ், முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது.
இதை தெளிவுப்படுத்தவும், கடந்த 2010 செப்டம்பர் 7 ம் தேதிக்கு பின், இதுநாள் வரை தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதிப்படுத்தவும், புதிதாக சேருவோருக்கு மட்டும், அச்சலுகையை பயன்படுத்தவும், புதிய சட்ட திருத்த மசோதா கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் , அரசு பணிகளில் தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்கும் இந்தப் புதிய மசோதாவுக்கு கவர்னர் அர்லேகர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
சாதி, மத, மொழி அரசியல் மக்கள் நல கொள்கையை மறைத்து விடும். அரசு பணியில் தமிழ்வழி, இட ஒதுக்கீடு மூலம் தேர்வு, பதவி உயர்வு பணியை முடக்கி விடும். மாநில மொழி தேசிய, சர்வதேச மொழி ஆக சாத்தியம் இல்லை. தமிழ் அறிஞர்கள் உருவாக்கி, தமிழ் நீதி நூல்கள், இலக்கியம், காப்பிய உண்மைகளை தமிழ் மக்கள் அறிய செய்ய வேண்டும். அது தான் பயன் தரும்.
தமிழில் படித்தேன் என்று சொல்லிவிட்டு, பழத்தை பலம் என்றும், தமிழ் என்பதை தமில் என்றும் தமிழ் மொழியை சரியாக உச்சரிக்க தெரியாதவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை கொடுக்காதீர்கள்.
ஒருவருக்கு கல்வி கிடைக்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கலாம். அனால் வேலை என்பது திறமை அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அரசு பள்ளிகளில் சரிவர வசதி இல்லாததால் அரசு இதை மறைக்க இது போன்ற சலுகைகளை செய்கிறது.
உருப்பட்டாற் போல்தான். லஞ்சம் வாங்குவதற்கு எந்த மொழியில் படித்தால் என்ன?
தவறு
இந்த சட்டதிருத்ததை கொண்டு வந்தது திராவிட மாடல் அரசு.மேலும்
-
வடகிழக்கு பருவமழை; சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமனம்
-
கங்கனா ரனாவத் - க்ரீத்தி சனோன் சண்டையில் புகுந்த ராகுல்
-
விமான நிலையமும் வேணும்... விவசாயமும் வேணும்; சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்
-
மேட்டூர் அணை நாளை மறுநாள் திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்
-
மைக்ரோசாப்ட் சிஇஓ., சத்யா நாதெல்லாவின் ஆண்டு சம்பளம் ரூ.950 கோடி; ஒரு நாளைக்கு ரூ.2.60 கோடி!
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘ரூ.6,000 முதலீட்டில் துவங்கிய தொழில் இப்போது ரூ.30 லட்சத்தில் நடக்கிறது!’ –––––––––––––––