அரளி விதை அரைத்து குடித்தவர் உயிரிழப்பு
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த வினோபா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 60. இவர், குடும்ப பிரசனை காரணமாக , அரளி விதை அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் அவரை மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வெங்கடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், உத்திரமேரூர் அடுத்த குப் பைநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன், 53. கடந்த 26ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரங்கன் உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
Advertisement
Advertisement