வனத்துறை வாகனத்தில் பள்ளி மாணவர்கள்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் லாரஸ்டன் பகுதியில், இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியில், வனத்துறையினர் 11 வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

புலி சிக்காத நிலையில், வாகன வசதி இல்லாத லாரஸ்டன், தெய்வமலை கிராம மக்கள் அச்சமடைந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர், தங்கள் வாகனத்தில் இக்கிராம மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் பணியை, இன்று முதல் துவங்கியுள்ளனர்.

Advertisement