சீன அதிபருடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி

7

பிஷ்கெக்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.


கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கிர்கிஸ்தான் அதிபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டின் இடையே, பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


இம்மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் கைக்குலுக்கிய பிரதமர் மோடி, அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது, ரஷ்ய அதிபர் புடினும் அருகில் இருந்தார்.


இம்மாத இறுதியில் பிரிக்ஸ் அமைப்பு மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்த நிலையில், இருவரும் சந்தித்தனர். பிரிக்ஸ் மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்க ஆதரவு அளிப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்து இருந்தார். மேலும் இம்மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.


@block_B@

வைரல்

இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் பிரதமர் மோடி ஒரே நேரத்தில் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினார். மூன்று தலைவர்களும் ஒரே நேரத்தில் கையை பிடித்து பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.block_B

Advertisement