நீட் தேர்வு விவகாரம்; நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கரப்பான்பூச்சி கட்சியினர், ஒரு மாதத்துக்கும் மேல் போராட்டம் நடத்தினர்.
இதே போல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். சில இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யும்படி அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், 'மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உரித்தான சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு சட்டப் பிரிவு - 142ஐ பயன்படுத்தி, அவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி அமர்வில் இக்கோரிக்கையை முன்வைத்து, மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார். இதை அமர்வு ஏற்றது. இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 1)தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜூலை 20ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, நாடு முழுவதும் எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பீஹார், மேற்குவங்கம் அசாம், மஹாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களும் மட்டுமே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தபோதிலும், நாடு முழுவதும் மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இருப்பினும், கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதால், ஜந்தர் மந்தர் போராட்டங்களில் கலந்துகொண்ட 2,873 நபர்கள் மீது ஒரு எப்ஐஆர் பதிவு செய்ய டில்லி போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
கரப்பான் பூச்சி இருக்கு என்று சொல்லி விட்டு இப்போ இல்லை என்றால் என்ன செய்ய
மாணவர்களுக்கும் ஒரு வயது வரையறை வேண்டும்,உதாரணமாக: JNU -ல் ஐம்பது வயதை கடந்தும் மாணவர்கள் என்ற போர்வையில் தேசவிரோத சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
நீதித்துறை..தேச துரோகிகளின் கூட்டத்திற்கு இந்த துறை ஏன் இப்படி கூஜா தூக்குது?
அரசியலமைப்பின்படி நடக்கும் மக்களாட்சி நாட்டில் அரசியல் அதிகாரத்தில் checks and balances என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை நீதிமன்றங்கள் குறிப்பாக உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும்.
மாணவர்கள் போர்வையில் என்ன செய்தாலும் அதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் பிறகு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பார்கள் எடுத்தால் அதை எடுக்க வேண்டாம் என்று தடுப்பார்கள் நீதிமன்றங்கள் நம் நாட்டின் சாபக்கேடு
மிகவும் கேவலமான , தேச,சமூக விரோத தீர்ப்பு. மாணவர்களிடையே வன்முறை தூண்டும் விதமான தீர்ப்பு. வரும் காலங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் இந்த சுப்ரீம் கோர்ட் தான் பொறுப்பேற்க வேண்டும். வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பை இந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளிடமிருந்து வசூலிக்கண்வேண்டும். நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கும் இந்த சுப்ரீம் கோர்ட்டே காரணம்.மேலும்
-
கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
-
கழிவுகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க நகராட்சி விழிப்புணர்வு
-
நகரை பசுமையாக்கும் திட்டம் துவக்கம் பசுமை குடில் அமைத்து நாற்றுக்கள் உற்பத்தி
-
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முகாமிட்ட யானை
-
8 மாதங்களில் 134 போக்சோ வழக்கு குழந்தை திருமணத்தால் 739 கர்ப்பம்
-
தினமலர் செய்தி எதிரொலி ரோட்டில் குவித்த சாக்கடை கழிவை அகற்றியது பேரூராட்சி நிர்வாகம்