கோயிலுக்குள் போன் கொண்டு செல்ல தடைக்கு வரவேற்பு!
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோயிலில், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கும் திட்டம், நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோயில்களில், செப்., 1 முதல் பக்தர்கள் மொபைல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில், நேற்று முதல் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வந்தது.
இதற்காக, மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டு பாதையில், மொபைல்போன் பாதுகாப்பு அறையும், மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் ஒரு மொபைல் போன் பாதுகாப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு போனுக்கு, 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, கோயில் இணையதளத்தில், பக்தரின் புகைப்படம், மொபைல் எண், எத்தனை மொபைல்போன்கள் ஒப்படைக்கப்படுகிறது என்ற விபரங்களை பதிவு செய்து, பக்தர்களுக்கு, ஒப்புகை சீட்டும் வழங்கப்படுகிறது. சீட்டின் நகலுடன், பக்தர்களின் போனை, லாக்கரில், கோயில் பணியாளர்கள் வைக்கின்றனர்.
தரிசனம் முடித்து வரும் பக்தர்கள், போன் திரும்ப பெறும் கவுன்டரில், ஒப்புகை சீட்டை கொடுத்தும், அந்த ஒப்புகை சீட்டின் டோக்கன் எண், பக்தரின் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, மொபைல் போனை ஒப்படைத்த நபரின் புகைப்படத்துடன், திரும்ப பெறும் நபரும் ஒருவர்தானா என்பதை உறுதி செய்த பின், போனை பணியாளர்கள் ஒப்படைக்கின்றனர்.
இந்த அறையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே, பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு, கோயிலில் மொபைல் போன்கள் இல்லாததால், அமைதியான சூழலில், சுவாமி தரிசனம் செய்து, தியானத்தில் ஈடுபட்டதும் காண முடிந்தது.
பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயில், பார்க்கிங் பகுதியில், மொபைல்போன் பாதுகாப்பு அறை அமைத்து மொபைல்போன் பெறப்படுகிறது.
மருதமலை கோயில் துணை கமிஷனர் விமலா கூறுகையில், போன் ஒப்படைப்பதற்கு 2 கவுன்டர்களும், திரும்ப பெறுவதற்கு 2 கவுன்டர்களும் உள்ளதால், பக்தர்களுக்கு வசதியாக உள்ளது.
இனி மெட்டல் டிடெக்டர் கொண்டு, ராஜகோபுரம் படிக்கட்டு பாதையில், மொபைல் போன் கொண்டு செல்கின்றனரா என்று சோதனை செய்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். விரைவில் ஆன்லைனிலும் கட்டணம் செலுத்தும் வசதி வரும் என்றார்.
இந்த ஆட்சியின் உருப்படியான நடவடிக்கைகளில் ஒன்று . பாராட்டுக்கள்.அந்த விளங்காத இந்து விரோத திமுகா ஆட்சியில் கருவறை வீடியோ எல்லாம் ரீல்ஸ் விட்டார்கள். முற்றிலுமே தடை செய்ய வேண்டும். எங்கம்மா சமயபுரம் மகமாயீ கருவறை ரீல்ஸ் ல் பார்த்து ரத்த கண்ணீர் வடித்தேன் . தயவு செய்து எல்லா கோவிலிலும் கடுமையாக நடை முறை படுத்துங்கள்.
பெரிய கோவில்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள் .அதற்கு நன்றி மூத்த குடிமக்களுக்கு அதாவது சலுகை நிலையில் தரிசனம் செய்பவர்கள். இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் .அவர்கள் சாமி கும்பிட மட்டுமே வருகிறார்கள் .ரீல்ஸ் போட வரவில்லை
கோவிலுக்குள் இனி தரிசன, கார் நிறுத்த கட்டணம் கிடையாது . அனைத்து கம்பி தடுப்புகளும் நீக்கப்பெறும் . இந்த அறிவிப்பை செய்யச்சொல்லுங்கள் இந்த அரசை தூக்கிப்பிடிக்கும் செயல்வீரர்களே
If the concern is mainly about mobile phones with cameras affecting the sanctity and security of temples, why not allow basic mobile phones without cameras? Not allowing mobile phones completely can difficulties for devotees, especially for communication and emergencies.
At the same time, if cameras are the main concern, CCTV cameras and photographers/videographers using cameras during temple events should also be considered. A practical and consistent approach could help balance temple discipline, security, and devotees convenience.
இந்த அறிவிப்பையும் ஏற்பாட்டையும் வரவேற்கிறோம். திருமலையில் இந்த பணியை செவ்வனே செய்கிறார்கள்
ஒரு இடம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் அங்கே அலைபேசி இருக்க கூடாது.
இனிமேல் கோவிலுக்குள் நடக்கும் தப்புகளை யாரும் படம் எடுத்து வெளிக்கொண்டு வரமுடியாது . தப்பை தட்டி கேட்க யாரும் இல்லை என்ற துணிச்சல் வந்து விடும் . இப்போது திருச்செந்தூரில் செல் போன் கொண்டு போக முடியாது என்பதால்ஊழியர்கள் மற்றும் பூசாரிகளிடம் வருமானம் கொழிக்கிறது. அதே போலத்தான் இனிமேல் மற்ற கோவில் களிலும் நடக்கும் . செல் போனுக்கு 5 ரூபாய் வசூலிப்பதால் கோவிலுக்கு வருமானம் பெருகும்
இந்த நடவடிக்கை மற்றும் அதற்கான ஏற்பாடுகளை வரவேற்கிறோம். திருமலையில் இந்த பணியை செவ்வனே செய்கிறார்கள்.ஒரு இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் அங்கே அலைபேசி இருக்கக்கூடாது.
வரவேற்கும் அனைவரும் மதம் மாறின கிரிப்டோஸ் ஹிந்து பெயரில் கல்லறைக்கு போகும் வரை. ஏற்கனவே சாமியை பார்க்க இரண்டு முதல் ஐந்து மணி நேரம் கால் கடுக்க நிற்க வேண்டியிருக்குது, இப்போது இது வேற, ஐந்து ருபாய் என்று சொல்லுவார்கள், டாஸ்மாக் மாதிரி பத்து ருபாய் வசூல் பண்ணுவார்கள், கேட்டால் அசிங்கமாக திட்டுவான்கள் அல்லது ஒன்று கூடி அடிப்பானுக . இதில் வசூல் செய்யும் லட்ச கணக்கான பணம், வேற்று மதத்தவனுகளுக்கு செலவு செய்வார்கள் கேட்டல் மதசார்பின்மை என்று தத்துவம் பேசுவான்கள். தமிழ்நாட்டில் இளிச்சவாயன்கள் இந்த ஹிந்து மக்கள்தான். ரீல்ஸ் போடுவதை தடுப்பதற்காம், இதில் ஈடுபடுபவன் அனைவரும் வேற்று மதத்தை சார்ந்தவன் இதுபோல ஆட்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாமல், கோவிலுக்கு போன் கொண்டு செல்ல தடையாம்
பக்தர்களின் நன்மைக்காக இப்படி ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டதா..? அல்லது கோவில்களில் நடக்கும் அதிகார அராஜகங்களையும் அறநிலைய கொள்ளைத்துறையின் ஊழல்களையும் யாரும் படம் பிடித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதா..? செல்போன் ஒப்படைப்பு மூலம் ஒரு போனுக்கு ரூ. 5 வீதம் கல்லா கட்டும் திட்டம்...
இது ஏற்கனவே மீனாக்ஷி அம்மன் கோயிலில் பல வருடங்களாக இருக்கும் நடைமுறை. கூட்ட நெரிசல் நாட்களில் சாமி கும்பிட வரிசையில் நிற்பதோடு போனை கொடுக்கவும், அதை வாங்கவும் வரிசையில் நிற்க வேண்டும். சீட்டு தொலைந்து விட்டால் அன்றைய பொழுது முழுவதும் கோவிலில் தான்.மேலும்
-
தமிழக அரசு ரேஷனில் வெங்காயம் வினியோகத்தை அதிகரிக்குமா: அனைத்து கடைகளிலும் வழங்க மக்கள் எதிர்பார்ப்பு
-
ஸ்டிக்கர் திட்டங்களை நிறைவேற்றிய புகழ் திமுக.,வை தான் சேரும்..: அந்துமணி பதில்கள்
-
மின் கசிவால் தீ விபத்து தனியார் பேக்கரி எரிந்தது
-
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
-
தேசிய சிலம்பம் மாணவி வெற்றி
-
218 நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை துவங்கியது