ஸ்டிக்கர் திட்டங்களை நிறைவேற்றிய புகழ் திமுக.,வை தான் சேரும்..: அந்துமணி பதில்கள்

22

@block_G@

வி.மோகன், கடலுார்:



'எங்கள் தலைவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு, திறப்பு விழா மட்டும் தான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை, ஒரு செங்கலைக் கூட நீங்களாக எடுத்து வைக்கவில்லை' என, தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, த.வெ.க.,வையும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் குற்றம் சாட்டுகிறாரே?block_G


'திட்டங்களைக் கொண்டு வந்து, அதையும் நிறைவேற்றாமல் விட்டு விட்டோம்' என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் மேயர் பிரியா! அதை விடுங்கள்... 'ஸ்டிக்கர்' திட்டங்களை நிறைவேற்றிய புகழ், தி.மு.க.,வை தான் சேரும்... இல்லையா மோகன்!


@block_B@

என்.ஆசைத்தம்பி, சென்னை:



'மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம்' என்று, தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளாரே?block_B

ஆதங்கத்தில் ஏதேதோ பேசுகிறார்... சூரியனும் மாலை நேரங்களில் மறைந்து விடுகிறதே. அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ஸ்டாலின்?


@block_Y@

கே.பி.முருகன், கமுதி:



'சட்டசபையில் துறை சார்ந்த உயர் அலுவலர்கள், கேள்வி நேரத்தின்போது இருக்க வேண்டும்' என, தி.மு.க., உதயநிதி, சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளாரே?block_Y

உதயநிதி கேட்டிருப்பது சரியே. கேள்வி நேரங்களில், துறை சார்ந்த செயலர்களும், அதிகாரிகளும், சட்டசபையில், 'ஆபீசர்ஸ் கேலரி' என்று அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும் என்பது சட்டசபை மரபு. அப்போது தான், என்ன பிரச்னை குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி கேட்கின்றனர் என்பது புரியும்; பதில் சொல்லவும் முடியும். சபாநாயகர் பிரபாகரும் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளாரே!


@block_P@

என்.ஜெயம், மேல் புவனகிரி:



'என்னைப் புகழாமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றி மட்டும் பேசுவதற்கு அனுமதியுங்கள்' என்று சபாநாயகரிடம், முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளாரே?block_P

நல்லது தானே. மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காக தானே சட்டசபை இருக்கிறது. தனி நபரைப் புகழ்ந்து பாடும் இடம் அல்ல அது. சட்டசபையில், பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா போல் பேச, அனைவரும் பயிற்சி பெற வேண்டும். அதை விடுத்து, மாமன், மச்சான் கதை பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது.


@block_G@

வே.ஜெயசீலி, சென்னை:



மாநில துப்பாக்கி சுடும் போட்டியில், சென்னை போலீசார் அசத்தியுள்ளனரே?block_G

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துப்பாக்கி சுடுவதில் வல்லவர். காவல்துறை இளைஞர்கள், தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். அது தான் காவலர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. நம் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வாலும், துப்பாக்கி சுடும் போட்டிகளில், பல வெற்றிகளைக் குவித்தவர்.

Advertisement