அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ.,

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தலில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், சட்டசபையில், அந்த தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., இளங்கோவன் பேசுகையில், 'முத்தனேந்தலில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்' என, கூறியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்திய பின், ஆக., 19 முதல் அங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.எல்.ஏ., இளங்கோவன் கேள்வி எழுப்பியது, தொகுதியில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல், எம்.எல்.ஏ., உள்ளாரா என, மக்கள் முணுமுணுக்கின்றனர்.

Advertisement