விழிப்புணர்வு முகாம்

நத்தம், செப்.4-

நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை இழந்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட மனநல மருத்துவர் மேபெல்ராஜ் மனநலம் பற்றி எடுத்துரைத்து, மனம் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபடும் வழிமுறைகள் விளக்கம் அளித்தார். வருவாய்த்துறையினர், போலீசார், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement