பலுசிஸ்தான் விடுதலை படை தாக்குதல்; பாக்., ராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழப்பு

6


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரண்டு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ), பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு இடங்களில் ராணுவப் பாதுகாப்புப் படை மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஹஜிகா பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தொலைவில் இருந்து இயக்கி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

சூராப் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்து ராணுவ வாகனம் சேதம் அடைந்தது. இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) பெறுப்பேற்றது. இரு வேறு தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement