குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
புதுச்சேரி: பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி ஜீவானந்தபுரம் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த ரவுடி சோனி (எ) அருண் 32, இவர் மீது 2 கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தற்போது உருளையன்பேட்டை போலீஸ் நிலைய வழக்கில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே வடக்குப்பிரிவு போலீஸ் எஸ்.பி., வம்சிதர ரெட்டி அருண் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று சோனி (எ) அருணை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
இதன்பேரில் புதுச்சேரி கோரிமேடு போலீசார், காலாப்பட்டு மத்திய சிறைத்துறையில் உள்ள சோனி என்கின்ற அருணிடம் வழங்கி கையொழுத்து பெற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement