'கலெக்டருக்கு நல்ல மனசு!'
பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் ஏரியை துார்வாரி, கரைகளை பலப்படுத்தி, நடைபாதை, பூங்கா ஆகியவை அமைக்கும் பணிக்கான துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இந்த பணியை, பெரம்பலுார் கலெக்டர் ஷரண்யா ஹரி தொடங்கி வைத்தார்.
பின் அவர் பேசுகையில், 'மாவட்டம் முழுதும் உள்ள மிக முக்கியமான ஏரிகளை கணக்கெடுத்து, சுத்தப்படுத்தி, துார்வாரும் பணிகளை படிப்படியாக தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
முன்னதாக நடந்த பூமி பூஜை விழாவில், புரோகிதர் மந்திரங்களை கூறி பூஜைகள் செய்தார். அப்போது, திட்டத்தின் பெயரை கூறி மந்திரங்களை ஓதினார்.
உடனே கலெக்டர் ஷரண்யா ஹரி, 'பெரம்பலுாருக்கு நல்ல மழை பெய்யணும்னும் சேர்த்து வேண்டுங்க' என புரோகிதரிடம் கூற, விழாவில் பங்கேற்ற ஒருவர், 'கலெக்டருக்கு நல்ல மனசுப்பா' என கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.
வாசகர் கருத்து (2)
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04 செப்,2026 - 20:01 Report Abuse
ஊருக்கு. உலகுக்கு. மழை. வேண்டும். என்று. வேண்டியிருந்தால், இன்னும் நல்ல. மனசு. சொல்லலாம் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
04 செப்,2026 - 10:33 Report Abuse
கலெக்டருக்கு நல்ல மனசுப்பா இது டபுள் மீனிங் ?? 0
0
Reply
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்
Advertisement
Advertisement