“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சி பிறந்தநாள் இன்று: நினைவு கூர்ந்த முதல்வர் விஜய், ஸ்டாலின்
சென்னை: “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார்.
தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
திமுக தலைவர், ஸ்டாலின்
தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள், நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி.? திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார்.
இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம். அவற்றுடன், 1908 திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம்.
தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்.
@block_G@
இது குறித்து துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “செக்கிழுத்த செம்மல்” வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் தேசப்பற்றையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
செல்வச் செழிப்பிலும் இன்ப வாழ்விலும் திளைத்து வாழக்கூடிய நிலையில் இருந்தபோதும், தம் வாழ்வை சமூகத்திற்கும் நாட்டிற்கும் அர்ப்பணித்து, தமது செல்வங்களையெல்லாம் துறந்து, கொடிய துன்பங்களையும் இன்னல்களையும் தாங்கிய மாமனிதர் வ.உ.சி பிள்ளை.
“கப்பலோட்டிய தமிழன்” என்று அன்போடு போற்றப்படும் வ.உ.சி., நம் மண்ணில் சுதேசி உணர்வைத் தீவிரமாகப் பரவச் செய்த மாபெரும் தலைவர்.
சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, ஆங்கிலேயரின் கடல் வணிக ஏகபோகத்திற்கு சவால் விடுத்து, சுதந்திரமும் சுயசார்பும் நம் சொந்த முயற்சியிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதைத் தமது செயலால் நிரூபித்தவர்.
இப்புனித நாளில், வ.உ.சி. பிள்ளையின் தியாகத்தைப் போற்றிப் புகழ்வதோடு, அவரது லட்சியக் கனவான சுயசார்புடைய, வளமான, வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்போம்'' என குறிப்பிட்டுள்ளார்.block_G
சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களுக்கும் சுதந்திரத்திற்கு எதிராக இருந்தவர்களுக்கும் திராவிட கட்சிகள் கொடுத்த மரியாதையை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தேன். கொடுமையாக உள்ளது.
வ உ சி அவர்களின் தியாகத்திற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்த பெருமகனுருக்கு சிரம் தாழ்த்தி ,அவர் நாடு சுதந்திரந்திற்காக பட்ட துன்பத்தை நினைவுகூர்ந்து, கரம் கூப்பி மரியாதை செலுத்துவோம்.
த.வெ.கவின் கொள்கைத் தலைவராக அய்யா வ.உ.சியை அறிவிக்காதது மிகவும் வருந்தத் தக்கது. அவரது புகழை முந்தைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ததால்தான் செக்கிழுத்த செம்மலை அவர் பாஞ்சாலி சேலையை இழுத்தது போல் இழுத்தார் என ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் சில பேர் பேசி நீதிமன்றத்தால் கொட்டு வாங்கி இருக்கிறார்கள். நமது இனக் காவலருக்கு இதுவரை புறக்கணிக்கப்பட்ட முழுமையான மரியாதையை தாங்கள் வழங்குவீர்கள் என முழுமையாக தங்களை நம்புகிறோம்.
முந்தைய அரசு கவனிக்கத்தவறிய கப்பலோட்டிய தமிழனை நினைவு கூர்ந்ததற்கு பாராட்டுக்கள். அதோடு நிற்காமல் அவர்களின் வாரிசுகளின் நிலைமையை கவனித்து தேவைப்பட்டால் தக்க உதவி புரியலாம். அத்துடன் வ. வே சு அய்யர், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், பாரதியார், சுப்ரமணிய சிவா , மருது பாண்டியர், கட்டபொம்மன், காமராஜர், நாகப்பன் போன்றோர்களை நினைவு கூர்ந்து பாராட்டி தேவைப்பட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு தக்க உதவிகளை செய்யவேண்டும்.
வா .உசி அவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார் ஆனால் கருமாந்திரம் புடிச்ச திருட்டு திராவிஷ மாடல் தமிழ் மக்களை டாஸ்மாக் சரக்கை ஊற்றி சாகடித்தீர்கள்ன்னு சொல்லு
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வ உ சி அவர்களது தியாகம் போற்றுதற்குரியது. கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களுக்கு பிரமாண்டமான வெங்கல சிலை ஒன்று,
ஈரவெங்காயத்திடம் மகனுக்காக வேலை கேட்டவர் வஉசி .... இது குடும்பக்கட்சியின் அவதூறு .......
அன்று கப்பலோட்டி ஒரு தமிழன் தமிழகத்துக்கு சிறந்த பெயர்
ஆனால் நாம் இவர்களை போன்றோரின் தியாகத்தையெல்லாம் மறந்து விட்டு வாழ்வு வந்தால் குடைப்பிடிப்பார்/....
திராவிட மாடல் செத்த மாடல். அது செஞ்சதெல்லாம் ஊழலும் ஊரை அடித்து உலையில் போட்டு ஊழல் காசையெல்லாம் மேல் நாடுகளில் பதுக்கியதுதான்மேலும்
-
பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
-
புதுச்சேரி காக்கிகளின் சபாரி பஞ்சாயத்து ஒரே டிபார்ட்மென்ட்... இரண்டு டிரெஸ் கோடு
-
காங்., கமிட்டி பயிற்சி துறைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
-
மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
-
தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள அச்சம்
-
நினைவு தினம்