ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஊர்வலம்

விருதுநகர், செப். 6 –

விருதுநகரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில மாநாட்டை முன்னிட்டு மகளிர் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை மகளிர் திட்ட மேம்பாடு திட்டத்தில் நிரந்தரம் செய்தல், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த ஊர்வலத்தை மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனையில் துவங்கி மாநாடு வரை நடந்தது. இதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ., செல்வம், கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.  

Advertisement