ரயிலில் வந்திறங்கிய 1293 டன் உர மூடைகள்

திண்டுக்கல், செப்.6-

திண்டுக்கல் மாவட்ட வேளாண் பயன்பாடு, விநியோகத்துக்காக, துாத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் உர  மூடைகள் திண்டுக்கல் வந்தது. அதன்படி யூரியா 784 டன், காம்ப்ளக்ஸ் 509 டன் என மொத்தம் 1293 டன் உர மூடைகள் வந்திறங்கின. அவை லாரிகள் மூலம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்கள், உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து விவசாயிகளின் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

Advertisement