ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

11


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

மத்திய காஷ்மீரின் யூஸ்மார்க் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது, சுட்டுக்கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி யாசிர் என்ற பாகிஸ்தான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

இவன் பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் 2024ம் ஆண்டில் ராணுவம் மற்றும் பொதுப்பணித் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்குகளில் தொடர்புடையவன் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பதுங்கியிருக்கும் மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement