மக்கள் நலன் சார்ந்த கொள்கையால் இந்தியா வேகமாக முன்னேறுகிறது; பிரதமர் மோடி

9


புதுடில்லி: 'மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற கொள்கையினால், இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது,' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் மிகவும் பிரபலமான ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழா, ஆசிரியர் தினமான இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக, அவர் மெட்ரோ ரயிலில் பயணித்துச் சென்றார். அப்போது, ரயிலில் பயணித்த மாணவர்கள், குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, பல்கலையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது; மேற்கு ஆசியாவில் போர் மற்றும் பல்வேறு வர்த்தக சவால்கள் நிலவும் காலகட்டத்திலும் கூட, இந்தியாவின் காலாண்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதை, ஜப்பானின் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியும் உயர்த்தியுள்ளது. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற கொள்கையுடன் இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.

1925ல் முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டதிலிருந்து 2014 வரை, சுமார் 90 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான ரயில் பாதைகளே மின்மயமாக்கப்பட்டிந்தனர். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தைப் பரப்புகிறவர்கள் தற்போது பின்தங்கியுள்ளனர். பாகிஸ்தான் எதாவது தவறு செய்தால், இந்திய ராணுவம் அவர்களின் எல்லைக்குள் நுழைந்து தாக்குவார்கள். ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரையிலும் தற்போது அமைதி அதிகரித்து வருகிறது. மவோயிஸ்ட்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு விட்டனர். இந்தியாவின் கொள்கை குறித்து ஒரு காலத்தில் கவலை தெரிவித்த உலக நாடுகள், தற்போது, இந்தியாவின் கொள்கை ரீதியிலான செயல்பாடுகள் பற்றி பேசுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement