முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பெரியசிறுவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்,63; இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பட்டத்தாள் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டத்தாள் தரப்பினர் ஒன்று சேர்ந்து பரமசிவம் மற்றும் வேல்ராஜினை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில், பட்டத்தாள், கணேசன், குமார், கண்ணன், கல்பனா, கண்மணி ஆகிய 6 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement