அழகப்பா நகை மாளிகை  இல்ல காதணி விழா

கடலுார்: கடலுார் அழகப்பா நகை மாளிகை உரிமையாளர் இல்ல காதணி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர். 

கடலுார் அழகப்பா நகை மாளிகை உரிமையாளர் மணி–கவிதா தம்பதி. இவர்களின் மகன் அஸ்வின்–அகிலா தம்பதியின் மகன் ஆதிக், காதணி விழா மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் நடந்தது.

சிதம்பரம் மணி ஜூவல்லரி உரிமையாளர் கோவிந்தராஜீ–மாலா, அழகப்பா குரூப்ஸ் உரிமையாளர்கள் நடேசன் பாபு, குமார் மற்றும் முத்துகணேஷ், நந்தினி முத்துகணேஷ், புதுச்சேரி ஆனந்த லஷ்மி ஜூவல்லரி முருகன், சாந்தி முருகன் வரவேற்றனர். 

சுபஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், ஆர்.எம்., மகாவீர் ஜூவல்லரி ஹரிஹந்த், வள்ளி விலாஸ் முரளி, வி ஸ்கொயர் மால் இயக்குனர் சரவணன், திவ்யா ஜூவல்லரி கமல், பாடலி அன்டு கோ ஜூவல்லரி சிவக்குமார், மற்றும் அனைத்து நகை கடை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள், அரிமா சங்க நிர்வாகிகள், விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள், அழகப்பா குரூப்ஸ் நகை கடை ஊழியர்கள் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர்.  

அழகப்பா நகை மாளிகை உரிமையாளர் அசோக், வெங்கட்ராமன் நன்றி கூறினர்.

Advertisement