பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், மாதந்தோறும் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம்.

இதையொட்டி இம்மாத ஊஞ்சல் உற்சவத்தில், மாலை 6:00 மணிக்கு, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement