ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

விருத்தாசலம்: ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் குறித்து ரயில்வே இருப்புபாதை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரின் அங்கு சென்ற விருத்தாசலம் இருப்பு பாதை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் சென்னையில் இருந்து சிவகாசி செல்வதற்கான ரயில் டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் பொது பெட்டியில் பயணம் செய்தபோது, தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.

இதுகுறித்து, விருத்தாசலம் இருப்புபாதை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement