ரயில்வே வேலை என ரூ.37 லட்சம் மோசடி

மதுரை: மதுரை செல்லுார் அஹிம்சாபுரத்தை சேர்ந்தவர் சங்கையா 48. இவரது மகன் அரசு பணிக்கு தயாராகி வந்த நிலையில், தாசில்தார் நகர் அப்துல் ரசாக் 40, அவரது மனைவி ஜீவிதா ஆகியோர் சங்கையாவிடம் அறிமுகமாகினர்.

ரயில்வேயில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக அவர்கள் கூறியதை நம்பிய சங்கையா, பல்வேறு தவணைகளில் ரூ.37 லட்சத்தை வழங்கினார். பணம் பெற்றவர்கள் வேலை வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. அவரது புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement