சுவர் இடிந்து தொழிலாளி பலி
மத்துார்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே சானிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 45. கூலித்தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, தன் வீட்டின் பின்புறமுள்ள கழிவறை சுவற்றை உடைக்கும் பணியில் ஈடுபட்-டிருந்தார்.
அப்போது, கான்கிரீட் கூரை இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார்.உயிரிழந்த ரமேஷிற்கு, சங்கீதா, 42, என்ற மனைவி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement