நக்சலை ஒழித்தது போல் போதைப்பொருளையும் ஒழிப்போம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளூரை
பணஜி: ''போதைப்பொருள் இல்லாத இளைஞர் சக்தியே, 2047ல், 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்தும் என, பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார். நக்சல்களை ஒழித்தது போல் 2029க்குள் போதைப்பொருளையும் ஒழிப்போம்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் பணஜியில் நேற்று நடந்த போதைப்பொருள் தடுப்பு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
இதில், முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய - மாநில உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
நடவடிக்கை கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது, போதைப்பொரு ளுக்கு எதிராக சிறிய அளவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதன் நெட்வொர்க்கை கண்டுபிடித்து அழிக்காமல், சிறிய குற்றவாளிகளையே போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அப்போது கைது செய்தனர்.
ஆனால், மத்தியில், 2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் விவகாரத்தை தேச பாதுகாப்பின் முன்னுரிமையாக மாற்றி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இலக்கு போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை உறுதி செய்ய, 2019-ல், நிர்வாக, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் நான்கு அடுக்கு கொண்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்புக்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு, உள்ளூர் போலீசார் தேசிய உத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் உறுதிப்பாடு, ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள், போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம், 'போதைப்பொருள் இல்லாத இந்தியா - 2029' என்ற இலக்கை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
போதைப்பொருளற்ற இந்தியாவிற்கான மூன்று ஆண்டு வரைபடமானது , உளவுத்துறை மற்றும் நடவடிக்கை அடிப்படை யிலான அமலாக்கம், செயற்கை போதைப்பொருள் மீதான கட்டுப் பாடு, தேவை மற்றும் தீங்கு குறைப்பு, திறன் மற் றும் ஒருங்கிணைப்பை உருவாக்குதல் ஆகிய நான்கு துாண்களை அடிப் படையாக கொண்டது.
உறுதி மத்திய அரசின் உள்நாட்டு பாதுகாப்பு உத்தியானது, ஜம்மு - -காஷ்மீரில் பயங்கரவாதம், வடகிழக்கில் கிளர்ச்சி மற்றும், இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது.
எல்லை மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது, துடிப்பான கிராமங்கள் திட்டம் ஆகியவை உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை களில் அடங்கும்.
நக்சலிசம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிக்க மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததோ, அதே போல், வளர்ந்த இந்தியாவின் கனவை நனவாக்க நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலையும் முழுமையாக அகற்ற உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலில் பிஜேபி ஆளும் மாநிலங்களிலாவது மதுவிலக்கு திட்டத்தை செயல் படுத்த முடியுமான்னு பாருங்க...அப்படி செய்தால் உங்கள் நோக்கத்தை நூறு சதம் நம்பலாம்.
போதை பொருட்கள் அதிகம் புழங்கும் மாநிலங்கள் ....பஞ்சாப் ,மஹாராஷ்டிரா ,கர்நாடகா ,தமிழ்நாடு ,புதுச்சேரி ..இந்த மாநிலங்களில் மத்திய போதைத்தடுப்பு படையை அமைத்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் ...தமிழகத்தில் கஞ்சா மற்றும் இன்ன செயற்கை போதை தூள்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஊடுருவி உள்ளன ....
ஐயா முதல்ல அரசுகள் சாராயம் விற்பதை ஒழியுங்கள் .அரசியல் அமைப்பு சட்டம் 47 க்கு எதிரானது என்ற போதிலும் எப்படி மாநில அரசுகள் எல்லாம் சாராய வியாபாரம் செய்யமுடிகிறது .உச்சநீதிமன்றம் எப்படி மாநில அரசுகள் சாராயம் விற்கலாம் என்று ஒரு பிழையான தீர்ப்பு வழங்கமுடிஞ்சது .அதை ஏன் மறுபரிசீலனைக்கு அரசு முயற்சிக்கவில்லை .அரசுகள் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் விற்கும்போது தனிமனிதர்களும் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் விற்கின்றார்கள் .குடிப்பவர்களுக்கு என்ன வித்தியசம் தெரியப்போகின்றது .மதிய அரசு எப்படி மாநில அரசுகள் சாராயம் விற்பதை சட்டத்திற்குட்பட்டதாக கருத முடியும் ?போதை கலாசாரத்திற்கு மூல காரணமான அரசு சாராயம் விற்பனையை ஒழிக்காமல் போதையை ஒழிப்பது வெறும் வெற்றுப்பேச்சே .
செய்பவர்தான் செய்தால் பாராட்டலாம் ஆனால் பிடித்த தமிழக போதை கடத்தல் மன்னன் அமீர் போன்ற பல குற்றவாளிகளை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், இந்த விவகாரத்தில் தாங்கள் தற்போதைக்கு தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்றம் ஒரு எளிய காரணத்தைக் காட்டி தள்ளுபடி செய்து விட்டதே. இன்று வரை எதுவும் செய்ய முடியவில்லையே இன்று கழக ஆட்சி இல்லையென்றாலும், தமிழக காவற்துறை இன்னமும் அவர்களின் பிடியிலிருந்து முழுவதுமாக வெளிவரவில்லை போதைப் பொருளால் வரும் வருமானம் பல கோடியிருக்க ஒரு சிறு பகுதி அதிகாரிகளுக்குத் தானமாக வழங்கப்பட்டால், போதுமே அப்படியென்றால் 2029க்குள் இது சாத்தியமா இல்லை ஒரு வெற்றுத் தேர்தல் அறிக்கையா?
நேற்று மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்ற தேசதுரோகிகளால் பலர் உயிரிழிந்ததா செய்தி...நாட்டை சீரழிக்கும் அனைவருமே தேச துரோகிகள் தானே..இல்லை மத வியயம் மட்டுமே இதில் அடக்கமா...
போதை பொருட்கள் விற்பனையில் அரசாங்கங்களில் ஊடுருவியுள்ள குற்றவாளிகளுக்கும் பங்குண்டு என்பதால் அவர்களை களையெடுக்காமல் ஒழிக்க முடியாது.
நல்ல சூளுரை தான்.
சொன்னதை செய்பவர் தான் அமித் ஷா.
நாட்டு நலனையே இதயத்தில் கொண்டவர் அமித் ஷா
அவரது சூளுரை வெற்றிக்கொடியை நாட்ட நல்வாழ்த்துக்கள்.
பாரதம் - போதை, மது, புகையிலை போன்ற கொடிய நோய்களில் இருந்து மீளட்டும்.
சொன்னதை செய்யும் அமித்சா அவர்கள் சொன்னதோடு நிற்காமல் நாடு முழுவதும் விரைவில் மதுவை தடை செய்ய சட்டம் இயற்றுவார் என்று நம்புவோம்.
திராவிடமாடல் ஸ்டிராங்கா இருக்கு ..... முடியாது .....
அப்ப... திராவிடர்களுக்கு அவர்கள் சேர்த்து வைத்த பணத்துக்கும் ஆபத்தா? அல்லது திராவிடர்கள் கொள்கைக்காக பணத்தை விட்டு விடுவார்களா அல்லது திராவிடத்துக்கு முடிவு காட்டுவார்களா... அதை விக்கப்பாவிடம்தான் கேட்க வேண்டும்.மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்