கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்

ஆனைமலை: ஆனைமலை அருகே அங்கலகுறிச்சியில், 1,500 அடி மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் நந்த கோபால்சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இரண்டாவது நாளான நேற்று குழந்தைகள், ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு, உறியடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

கிருஷ்ணர் வேடம் அணிந்த சிறுவன், மிருதங்கம் வாசித்தது பக்தர்களை கவர்ந்தது. ஸ்ரீ நந்தகோபால்சுவாமி, பாமா, ருக்மணி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement