இஸ்ரோவை தனியார் மயமாக்குவதா? விளக்கம் கேட்கும் ஊழியர் சங்கங்கள்
புதுடில்லி: 'இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து, அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும்' என, இஸ்ரோவைச் சேர்ந்த ஒன்பது ஊழியர் சங்கங்கள், அதன் தலைவர் நாராயணனுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடிதம்
தனியார் விண்வெளி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து, அனுமதித்து, கண்காணிக்கும் பணிகளை, 'இன்-ஸ்பேஸ்' எனப்படும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆக., 21ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'இன்-ஸ்பேஸ்' தலைவர் பவன் கோயங்கா பேசுகையில், 'வரும் காலங்களில் இஸ்ரோ எந்த ராக்கெட்டுகளையும் தயாரிக்காது.
'ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் உற்பத்தி பணிகள் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் மேற் கொள்ளப்படும்' என்றார்.
இது குறித்து விளக்கம் கேட்டு இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு ஊழியர் சங்கங்கள் கடிதம் அனுப்பியுள்ளன.
அதன் விபரம்:
இஸ்ரோவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கானதாக மட்டும் கட்டுப்படுத்தி, நாட்டின் ராக்கெட்டுகளின் தயாரிப்பு மற்றும் ஏவுதள செயல்பாடுகளை அரசு கட்டுப்பாட்டில் இருந்து வெளியே கொண்டு செல்லும் கொள்கையை, விவாதமின்றி ஏற்க முடியாது.
நிலைப்பாடு
இஸ்ரோ உருவாக்கிய தொழில்நுட்பம் தேசிய சொத்து. அதை தனியாருக்கு மாற்றும் நடவடிக்கை வெளிப்படையாகவும், பொறுப்புடனும் இருக்க வேண்டும்.
அதன் கொள்கை, சட்ட மற்றும் நிர்வாக அடிப்படை, செயல்படுத்தப்படும் காலகட்டம், தற்போதுள்ள ஊழியர்கள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
பி.எஸ்.எல்.வி., எல். வி.எம். 3., எஸ்.எஸ்.எல்.வி. , மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் ராக்கெட்டுகளின் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பு, ஒருங்கிணைப்பு, சோதனை மற்றும் ஏவுதல் பணிகள் தொடர்ந்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருக்குமா அல்லது தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், இஸ்ரோவின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போதுள்ள காலியிடங்கள், புதிய ஆட்சேர்ப்பு கால அட்டவணை மற்றும் இஸ்ரோவின் அனைத்து மையங்களிலும் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான எதிர்கால நிலைப்பாடு குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் வரிப்பணத்தை வெவ்வேறு இலவச திட்டங்களில் வீணாக்குவது மட்டும் ஏற்று கொள்ள முடியுமா? மக்கள் வரிப்பணம் என்றாலும் தரத்தால் , செயல் திறத்தால் லாபம் ஈட்டும் தொழிலாகவே மாறியுள்ளது. இப்போது தனியாருக்கு தாரை வார்ப்பது மிகவு ம் யோசித்து செயல் பட வேண்டிய ஒன்று.
ராக்கெட் தயாரிக்கவே மாட்டோம் என்று இஸ்ரோ அதிகாரி அறிக்கை விடுவது இன்னும் பயம் தருவதாக உள்ளது.
உதாரணமாக அரசின் BSNL தேய்ந்த வரலாற்றை சொல்லலாம். தனியார் நிறுவனங்கள் 5, 6G endru ராக்கெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் பொது , BSNL தொலைபேசி நிறுவனத்தால் இன்னும் தமிழகம் முழுவதும் 4ஜி யோ 5G சேவை யோ வழங்க முடியாமல் நஷ்டத்தில் இயங்குகிறது.
பிஎஸ்எல்வியைத் தாண்டி வெளியே செல்வதில்லை இஸ்ரோ ஏன் எனத் தெரியவில்லை. ஆதித்யா மிஷன் என்ன ஆனது? மிக அதிக நம்பகத்தன்மை வாய்ந்த பிஎஸ்எல்வி கூட சமீபத்தில் இரண்டு தோல்விகள். என்னதான் நடக்கிறது இஸ்ரோவில். ஆண்டாண்டு காலமாய் ராக்கெட்டுகள் மட்டுமே ஏவிக் கொண்டேயிருக்கலாம் என இஸ்ரோ எண்ணுகிறதா? இஸ்ரோவின் முதன்மைப் பணி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதுதான். ககன்யான் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம், சந்திரயான் தொடர்கள், சுக்ராயன் வீனஸ் திட்டம், மற்றும் பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன் BAS - விண்வெளி நிலையம் போன்ற பணிகளுக்கு இஸ்ரோவின் விஞ்ஞான வளங்கள் முழுமையாகத் தேவைப்படுகின்றன. மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் RLV, scramjet என்ஜின்கள் மற்றும் அணுசக்தி உந்துவிசை nuclear propulsion போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை உருவாக்க இஸ்ரோவுக்குப் போதிய கால அவகாசமும் கவனமும் தேவை. வழக்கமான PSLV/LVM3 ஏவுதல்களில் நேரத்தைச் செலவழிப்பதை விட, உலகளாவிய அறிவியல் பங்களிப்பில் நாசாவிற்கும் பிற ஏஜென்சிகளுக்கும் இணையாக இந்தியா முன்னிலையில் நிற்க ஆய்வுப் பணிகளே உதவும். ஏற்கனவே நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் NSIL மற்றும் IN-SPACe மூலம் உற்பத்தி மற்றும் ஏவுதல் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு எல்&டி, எச்ஏஎல் கூட்டணி மற்றும் அக்னிகுல், ஸ்கைரூட் போன்ற ஸ்டார்ட்-அப்கள் மாற்றும் பணிகள் தொடங்கிவிட்டன. எனவே இஸ்ரோவின் முடிவு சரியானதே. தொழிற்சங்கங்கள் தன் சுயநலத்திற்காக குரல் கொடுக்கின்றன.
இந்த உண்டியல் கட்சி காரன் சும்மா இருக்க மாட்டார்கள் போல் இருக்கு இபடித்தான் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவணம் ஊழியர் சங்கத்தினால் சரி வர செயல்படவில்லை அதுவும் தனியாரிடம் கொடுக்க வேண்டும்
Space X வந்த பிறகு NASA அதிக ராக்கெட்டுகளை அனுப்புவதில்லை
மக்கள் வரிப்பணத்தில் ISRO செயல்படுவதை குறைத்துக்கொள்வது சரியானதுமேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்