சேந்தமங்கலத்தில் மழை

சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில் நேற்று மாலை, 5:00 மணிக்கு மிதமான காற்று வீச தொடங்கியது. அதை தொடர்ந்து சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. 7:00 மணியளவில் கன மழை கொட்ட தொடங்கியது.

இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. சேந்தமங்கலம் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடப்பது வழக்கம். கொட்டிய கன மழையால், சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

Advertisement