19 தலைமை காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

புதுச்சேரி: போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 19 தலைமை காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி உளவுப்பிரிவு போலீசாரை தொடர்ந்து போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 19 தலைமை காவலர்கள் மற்றும் காவலர்களை அதிரடியாக ஆய்தப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., மோகன் குமார் பிறப்பித்துள்ளார். மேலும் புதிதாக தேர்வாகி ஆயுதப்படை பிரிவில் உள்ள காவலர்கள் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளனர். 

 

Advertisement