பா.ஜ., தமிழக நிர்வாகிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு

5

சென்னை: பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தத்திற்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் ஏ.பி.முருகானந்தம், 48; பா.ஜ., தமிழக பொதுச்செயலராக உள்ளார்.

இவருக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் இருந்ததால், தமிழக காவல் துறை சார்பில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சுழற்சி முறையில் நான்கு போலீசார், முருகானந்தத்திற்கு பாதுகாப்பு அளித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்த, சில அமைப்புகள் முயற்சிப்பதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து, அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, மாநில போலீசாருக்கு பதில், மத்திய ரிசர்வ் போலீசார் எட்டு பேர், முருகானந்தத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement